சுந்தர வரதர் கோவிலில் கருடசேவை உற்சவம்

சுந்தர வரதர் கோவிலில் கருடசேவை உற்சவம்

 உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் நடந்தது. 

உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் எழுந்தருளிய சுந்தரவரதராஜ பெருமாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார்.

இதில் மூன்றாம் நாள் உற்சவமான நேற்று காலை, கருடசேவை உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில், நேற்று, அதிகாலை 4:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, 5:00 மணிக்கு பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். தொடர்ந்து நான்கு மாட வீதிகளிலும் உலா வந்த பெருமாளுக்கு கங்கை கொண்டான் மண்டபத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏழாம் நாள் உற்சவமான வரும் 23ம் தேதி காலை, தேரோட்டம் நடக்கிறது.

Tags

Next Story