திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திண்டிவனம் அருகே கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீயை அணைக்கும் தீயணைப்பு துறையினர் 

திண்டிவனம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டரில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). டிரைவராக உள்ளார். இந்நிலையில் இவருடைய மனைவி வீட்டில் உள்ள கியாஸ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென கியாஸ் சிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குமார் மற்றும் அவரது மனைவியும் அலறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் தீயணைப்புதுறையினர் கியாஸ் சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags

Next Story