அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இட்லி சுட்டுக்கொடுத்து வாக்குகள் சேகரிப்பு!

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக  இட்லி சுட்டுக்கொடுத்து வாக்குகள் சேகரிப்பு!

அதிமுக

புதுக்கோட்டை கோவில்பட்டியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக அவரது அண்ணியார் இட்லி சுட்டுக்கொடுத்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

புதுக்கோட்டை கோவில்பட்டியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக அவரது அண்ணியார் இட்லி சுட்டுக்கொடுத்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி என் ஜி ஓ காலனி மேலத்தெரு நடுவீதி அபிராமி நகர் ஆகிய பகுதியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவின் அண்ணியார் சத்யா கரிகாலன் இன்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது அங்கிருந்து ஒரு சிறு கடையில் இட்லி சுட்டுக் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story