நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம் 

பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொது குழு கூட்டம், மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் பிப்ரவரி 3ஆம் தேதி இன்று பகல் 1:30 மணியளவில் நடைபெற்றது சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி, மாவட்ட இணை செயலாளர் காட்டு ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்களமாக அறிவிக்க வேண்டும்.

சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறா ஊழியருக்கான ஊதியம் ரூ5200 , ரூ20,000 தர ஊதியம் ரூ1900 நிர்ணயம் செய்து ஏழாவது ஊதிய மாற்ற பலன்கள் வழங்க வேண்டும பணி நீக்க காலத்தில் இறந்து போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி மற்றும் நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும், முடக்கப்பட்ட பஞ்சப்படி சரண் விடுப்பு ஊதியம், உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன,

இந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர்தெய்வ ராஜா, தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அமைப்பாளர் சின்னசாமி, . .தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story