விடுதலைக்களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

விடுதலைக்களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

விடுதலைக்களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்

விடுதலைக்களம் கட்சியின் சார்பில் பிப்.25-ல் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் கட்சியின் பொதுகுழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் அமைத்தல் குறித்த ஆலோசனை மற்றும் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்.25-ல் நடைபெறும் என கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டின் 18 -ஆவது நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க இருப்பதை ஒட்டி, விடுதலைக் களம் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

வருகிற பிப்ரவரி 25 ஞாயிறு மதியம் 2 மணிக்கு நாமக்கல் உழவர் சந்தை எதிரில் உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் இப்பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரமும் பிரதிநிதித்துவமும் கிடைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், அதற்கேற்றவாறு வியூகங்கள் வகுப்பது குறித்தும் இந்த பொதுக்குழு விவாதிக்கும்.

பொதுக்குழு கூட்டத்தில் விடுதலைக் களம் கட்சியின் மாநில நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அணி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Tags

Next Story