மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம்

வீரவணக்க நாள் கூட்டம் 

பள்ளப்பட்டியில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,பள்ளப்பட்டியில் நேற்று இரவு மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர பொருளாளர் அப்பாஸ் சித்திக், மாவட்ட அவை தலைவர் ராமசாமி, மாநில தொண்டரணி துணை செயலாளர் முத்துராஜ், கரூர் மாவட்ட செயலாளர் ஆசை.சிவா, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் கபினி கே கே சிதம்பரம், மாநில மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் பால. சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் துணை பொது செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது, மொழிப்போர் தியாகிகள் செய்த தியாகத்தை பட்டியலிட்டு பேசினர். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இந்திரஜித் நன்றி கூறினார்.

Tags

Next Story