மதுரவாயிலில் எம்எல்ஏ தலைமையில் பொது உறுப்பினர் கூட்டம்

வானகரம் ஊராட்சி பொது உறுப்பினர் கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் அ.மா. துரைவீரமணி தலைமையில் நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியம், வானகரம் ஊராட்சி பொது உறுப்பினர் கூட்டம் ஆண்டாள் கல்யாண மண்டபத்தில், ஒன்றிய கழக செயலாளர் அயப்பாக்கம் அ.மா. துரைவீரமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து பி எல் ஏ 2, டி எல் சி பணிகள் மற்றும் கட்சி பணிகள் குறித்து மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் அருள், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், சாமிநாதன், ரவி,கிரிஜா, ஜெயசுதா இரா.வினோத், யுவராஜ், தேவி சீனிவாசன், கு.சதீஷ்குமார், கௌரிசங்கர், கு.செந்தில்குமார், தேவராஜ், பர்மன், சீனிவாசன், முரளி கிருஷ்ணன், மகாதேவன்,க.வரதன், செந்தில்குமார், வேலாயுதம், பாபு, மகாலிங்கம், சசிகுமார்,ஜானகிராமன்,S.நவீன் காளிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story