வேலூர் மாவட்டத்திற்கு மே.14 ல் உள்ளூர் விடுமுறை

வேலூர் மாவட்டத்திற்கு குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் திருக்கோவில் சிரசு ஊர்வல திருவிழா வரும் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது திருவிழாவில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள சிரசு திருவிழா நடைபெறும் நாளில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை நாளான 14ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் மாதம் 22ஆம் சனிக்கிழமையன்று அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், அமைச்சக பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி வேலை நாளாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story