கட்சி துவங்குவது எளிதானது; ஆனால் தொடர்ந்து நடத்துவது சிரமம்

கட்சி துவங்குவது எளிதானது; ஆனால் தொடர்ந்து நடத்துவது சிரமம்

அரசியல் கட்சி துவங்குவது எளிதானது; ஆனால் தொடர்ந்து நடத்துவது சிரமமானது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

அரசியல் கட்சி துவங்குவது எளிதானது; ஆனால் தொடர்ந்து அதை நடத்துவது சிரமமானது என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் வருகிற 4 ம் தேதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நடத்தும் கொங்கு மண்டல எழுச்சி மாநாட்டு பணிகளை அக்கட்சியின் பொதுசெயலாளர் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநாட்டிற்கு அனைத்து கட்சி பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் மாநாட்டிற்கு அழைத்துள்ளதாகவும் , இந்த மாநாட்டில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 16 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வள்ளி - கும்மி ஆட்டம் நடைபெறுகிறது என்றார்.

விஜய்தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் , இதில் சினிமா நடிகர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் , அரசியல் தொடங்குவது சுலபம் ஆனால் அதை தொடர்ந்து நடத்துவது என்பது மிகவும் சிரமம் என்றார். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ சோதனை உள்நோக்கதோடு நடைபெறுகிறது என்றும் , இந்த சோதனை சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருக்கலாம் என்றும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Tags

Next Story