பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் பொண் இருளாண்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குழந்தைகளும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் போலீஸ் கிருஷ்ணவேணி பள்ளியில் வைத்து சமுதாயத்தில் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story