சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் கரைகண்டார்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கமுருகன்-சுகன்யா தம்பதியின் (8) வயது மகளான கனிஷ்கா அப்பகுதியில் விளையாண்டு கொண்டிருக்கும்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் விளையாடச் சென்ற சிறுமையை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் கிணற்றுக்குள் சிறுமி விழுந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தீயனைப்புத் துறையினரின் உதவியோடு சிறுமி மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இது குறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story