இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்.

உறவினர்கள் சாலைமறியல் 

இளம்பெண் மரணத்தில் மர்ம இருப்பதாக கூறி டலூர் - திருக்கோயிலூர் பிரதான சாலையில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த திருவள்ளுவன் மகள் சுபா ஆடலரசி (26) இவர் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் அலுவலக ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் மர்மமான முறையில் தூக்கி விட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் அந்த இடத்தில் அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்ததாக சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகாரியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது, எனவே இறந்து போன பெண்ணுக்கு நீதி கேட்டும் இறப்பிற்கு காரணமான நபர்களை யார் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முறையான நிவாரணம் வழங்க கோரியும் கடலூர் - திருக்கோயிலூர் பிரதான சாலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் ஆய்வாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் சுமார் அரை மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்ததால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags

Next Story