பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி சிறுமி படுகாயம்...

பந்தலூர் அருகே கொலப்பள்ளி டேண்டி பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கி சிறுமி படுகாயம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த டிசம்பர் 21 ஆம் ஏலமன்னா கிராமத்தில் மூன்று பழங்குடியின பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த நிலையில் பந்தலூர் அருகே கொலப்பள்ளி டேண்டி பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை தாக்கியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி சிறுமியை மீட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுத்தை தாக்கி சிறுமி படுகாயமடைந்த சம்பவத்தால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் வனத்துறையினர் சம்பவ இடத்தில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story