சிறுமிக்கு பாலியல் தொல்லை - வியாபாரி போக்சோவில் கைது!

சிறுமிக்கு பாலியல் தொல்லை - வியாபாரி போக்சோவில் கைது!

போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரியை அவினாசி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் அவினாசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை வியாபாரி போக்சோவில் கைது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் மகன் கனிஷ்ன் என்ற கணேஷ் (வயது 32) இவர் அவினாசியை அடுத்த பெரியாயிபாளையத்தில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணேஷ் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனிமையில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story