ஈரோடு வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் தீவிர பிரச்சாரம்

ஈரோடு வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் தீவிர பிரச்சாரம்

 ஈரோட்டில் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோட்டில் நாடாளுமன்ற வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு் நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வீரப்பன்சத்திரத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய G.K.வாசன் , சைக்கிள் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராகவும் , பாரத பிரதமர் நரேந்திர மோடி கரத்தை வலுப்படுத்த வேட்பாளராகவும் , தொகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து நாடாளுமன்றத்தில் போராடி தேவைகளை பெற தமாகா வேட்பாளர் விஜயகுமாருக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் அதன் அடிப்படையில் வளமான பாரதம் வளமான தமிழகம் அடிப்படையில் இருக்க சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன் எனக்கூறி பேச்சை நிறைவு செய்தார் முன்னதாக தமாகா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் தேர்தல் பணிமனையிலிருந்து அரசு மருத்துவமனை சந்திப்பு வரை சைக்கிள் சென்று ஆதரவு திரட்டியும் பின்னர் சூரம்பட்டி நான்கு ரோடு , ரயில்நிலையம் , மரப்பாலம் , பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றவாறு சைக்கிள் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

Tags

Next Story