அதிமுக நடத்திய கோலப் போட்டி

அதிமுக நடத்திய கோலப் போட்டி

அதிமுக நடத்திய கோலப் போட்டி

சீர்காழியில் அதிமுக சார்பில் கோலப்போட்டி, போட்டியில் பங்கேற்ற மனைவிகளுக்கு கோலம் வரைந்து உதவிய கணவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மார்கோனி கார்டனில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்தநாளையொட்டி பெண்களுக்கான கோலப்போட்டி அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஆனந்தநடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள், நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று பல்வேறு விதவிதமான வண்ண கோலங்கள், ரங்கோலி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவம், சாதனைகளை கூறும் கோலங்களை வரைந்தனர். கோலப்போட்டியில் பங்கேற்ற மனைவிகளுக்கு துணைக்கு வந்திருந்த அவர்களது கணவர்கள் உதவிபுரிந்தனர்.இதில் முதல் மூன்று பரிசுகளுக்கு உரிய கோலங்கள் தேர்வு செய்யப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.இதில் முன்னாள் எம்.எல்.ஏ என்.சந்திரமோகன், பொறியாளர் இ.மார்கோனி, அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story