கன்னிவாடி சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைவு

கன்னிவாடி  சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைவு
ஆடுகள் விற்பனை 
கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வரத்து அதிகரிப்பால் ஆடுகள் விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச் சந்தை இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகின்றது.இங்கு கோவை பொள்ளாச்சி உடுமலை மதுரை திருச்சி சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர் வெள்ளகோவில் பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர் கடந்த இரண்டு வாரங்களாக கோவில் திருவிழாக்கள் காரணமாக ஆடுகள் நல்ல விலைக்கு கிடைத்தது இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. அதை நம்பி விவசாயிகள் இந்த வாரமும் அதிக அளவில் ஆடுகளை கொண்டு வந்தனர் .ஆனால் எதிர்பார்த்த அளவு ஆடுகள் விற்பனை நடைபெறவில்லை இதனால் ஆடுகளை கொண்டு வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது இருப்பினும் சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை கடந்த வாரம் ரூ. 6000 ஆக இருந்தது. இந்த வாரம் ரூ.500 விலை குறைந்து ரூபாய் 5500 க்கு விற்பனையானது. இந்த வாரம் சுமார் 6000 துக்கு மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story