ஆட்டுச் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

ஆட்டுச் சந்தையில் ஆடு விற்பனை மந்தம்

ஆட்டு சந்தையில் விற்பனை


திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். இங்கு திண்டுக்கல், மதுரை, செம்பட்டி, சின்னாளப்பட்டி, ஆத்தூா், மல்லையாபுரம், நிலக்கோட்டை, கன்னிவாடி, ரெட்டியாா்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும்.இந்த நிலையில், காா்த்திகை மாதம் தொடங்கியதால், அசைவம் சாப்பிடுவதை மக்கள் தவிா்த்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை ரூ.30 லட்சத்துக்கும் குறைவாகவே நடைபெற்றது.

Tags

Next Story