நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

சந்தையில் குவிந்த வியாபாரிகள்

நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஆடுகள் விலை அதிகரித்ததால் விற்பனை மந்தமாக நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் பிரத்தியேகமாக ஆடுகள் விற்பனைக்காக வார சந்தை நடைபெறும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததனால் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டுச் சந்தை, இன்று ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டதால் மந்தமாக நடைபெற்றது.

ஆடுகள் அளவைப் பொறுத்து 3 ஆயிரம் ரூபாய் முதல் பெரிய அளவிலான ஆடுகள் 22 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 40 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story