நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ஆடுகளின் வரத்து மற்றும் விற்பனை மந்தமாகவே இருந்தது, மேலும் நேற்று ஒரே நாளில் ரூ.35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம் வார சந்தை நடைபெறும் நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமான சந்தையும் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை கூடிய வார சந்தையில் ஆடுகள் விற்பனைக்காக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். சிறிய அளவிலான ஆட்டுக்குட்டி 3,000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22,000 வரை விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் ஆடுகள் வரத்து மற்றும் விற்பனை மந்தமாக காணப்பட்டதாகவும் நேற்று ஒரே நாளில் சுமார் 35 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story