ஆடு திருடியவர்கள் அதிரடி கைது

ஆடு திருடியவர்கள் அதிரடி கைது

திசையன்விளையில் ஆடு திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். 

திசையன்விளையில் ஆடு திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் தொடர் ஆடு திருட்டு நடைபெற்றதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இது குறித்த விசாரணையில் ஈடுபட்ட திசையன்விளை போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட வி.எஸ்.ஆர் நகரை சேர்ந்த ஞானமூர்த்தி(24), ஐகோர்ட் ராஜா(23), மந்திரம் மூர்த்தி(19), ராஜா(21), ஆறுமுகம்(20) ஆகியோரை நேற்று (ஜூன் 24) கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூ.84,000 மதிப்பிலான 7 ஆடுகளை மீட்டனர்.

Tags

Next Story