நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

நல்லம்பள்ளி வார சந்தையில் சிறிய அளவிலான ஆடுகள் 8,000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் நாடுகள் 25,000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 50 லட்சத்துக்கு  வர்த்தகம் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம். வார சந்தை நடைபெறும் நாட்களில் பிரத்தியேகமாக ஆடுகள் விற்பனைக்காக ஆட்டு சந்தையில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று காலை கூடிய ஆட்டு சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகள் இதற்கு மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் இன்று 1,500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது சிறிய அளவிலான ஆடுகள் 8,000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் நாடுகள் 25,000 ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 50 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story