மேட்டூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

மேட்டூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி

மேட்டூரில் மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் எட்டு ஆடுகள் பலியாகின.

மேட்டூரில் மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் எட்டு ஆடுகள் பலியாகின.

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரி ஒன்றியம் எல்லை குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (55)இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு வனப்பகுதி அருகே உள்ள விவசாய நிலத்தில் பட்டியில் 31 ஆடுகளை அடைத்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு சென்று விட்டார். காலை பட்டிக்கு வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் எட்டு ஆடுகள் பரிதாபமாக பலியானது. இது குறித்து தங்கவேல் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இறந்து போன ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டது. இது குறித்து விவசாயி தங்கவேல் கூறுகையில் இறந்து போன ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என்றார். இறந்து ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Tags

Next Story