மேட்டூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி.

மேட்டூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி.

இறந்த ஆடுகள்

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் மர்ம விலங்கு கடித்து ஐந்து ஆடுகள் பலியானது.

மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே செல்லப்பனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த விவசாயி மல்லிஸ்வரி (55) 6 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு அருகே பட்டியில் 6 ஆடுகளை அடைத்துவிட்டு உறங்கச் சென்று விட்டார்.

இன்று காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்துக் குதறியதில் ஐந்து ஆடுகள் பரிதாபமாக பலியானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்து போன ஆடுகள் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டது. இறந்து போன ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் என மல்லிஸ்வரி தெரிவித்தார். இப்பகுதியில் அடிக்கடி மர்ம விளங்கு ஆடுகளை கடித்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

Tags

Next Story