இடி, மின்னல் தாக்கி ஆடுகள் பலி - தொழிலாளி காயம்

இடி, மின்னல் தாக்கி ஆடுகள் பலி - தொழிலாளி காயம்

மின்னல் தாக்கி பலி

மானாமதுரை அருகே இடி, மின்னல் தாக்கி ஆடுகள் பலியான நிலையில் தொழிலாளி காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அருகே உள்ள வின்சென்ட் நகரை சேர்ந்தவர் பாக்கியம் மகன் ஆறுமுகம், இவர் தனது ஆடுகளை பனிக்கனேந்தல் கிராம கண்மாய்க்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்த போது இடி தாக்கியதில் ஆறுமுகத்திற்கு சொந்தமான 7 ஆடுகள் பலியானது. காயமுற்ற ஆறுமுகம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Next Story