நல்லம்பள்ளி வாரச்சந்தையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை 

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை 

சந்தையில் குவிந்த வியாபாரிகள்

இன்று காலை 6 மணி அளவில் கூடிய ஆட்டுச் சந்தையில் சிறிய அளவிலான ஆடுகள் 3,500 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் ஆட்கள் 17,000 ரூபாய் வரை விற்பனையானது இன்று 35 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை நடைபெறும். வாரச்சந்தை நடைபெறும் நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான சேலம் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் இன்று காலை 6 மணி அளவில் கூடிய ஆட்டுச் சந்தையில் விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க குவிந்தனர்.

சிறிய அளவிலான ஆடுகள் 3,500 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் ஆட்கள் 17,000 ரூபாய் வரை விற்பனையானது இன்று 35 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story