நல்லம்பள்ளி வாரச்சந்தையில் 55 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறுவதை முன்னிட்டு விற்பனை ஜோராக நடைபெற்றதாக வியாபாரிகள்.
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வார சந்தை நடைபெறுவது வழக்கம் வார சந்தை நடைபெறும் நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக சந்தை நடைபெறுகிறது இன்று காலை 6 மணிக்கு கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காடுகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர் இன்று ஒரு சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில 20000 ரூபாயில் வரையில் விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 55 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story