சந்தைப்பேட்டையில் 24 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

சந்தைப்பேட்டையில் 24 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

சந்தைக்கு வந்த வீடுகள்

சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 24 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

தர்மபுரி சந்தப்பேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம் அந்த வகையில் இன்று காலை வழக்கம் போல் ஆட்டுச் சந்தை கூடியது,

ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான சோலை கொட்டாய்,செட்டிகரை,நல்லம்பள்ளி, குள்ளனூர்,குண்டலபட்டி,நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை,தடங்கம்,ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி,ராஜா பேட்டை,லளிகம் ,போன்ற பகுதியில் இருந்து ஆடுகளின் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று ஒரு சிறிய ஆட்டுக்குட்டி விலை 2500 முதல் பெரிய ஆடு 20000 ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 24 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story