கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 6கோடிக்கு ஆடுகள் விற்பனை

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 6கோடிக்கு ஆடுகள் விற்பனை

சந்தையில் குவிந்த வியாபாரிகள் 

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் 6கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது . இச்சந்தைக்கு சேலம் ,நாமக்கல்,ஈரோடு,தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் ஆடுகளை கொண்டுவந்து விற்பனைசெய்தும், வாங்கியும் செல்கின்றனர்.

இன்று பிப்ரவரி 3 ம்தேதி கொங்கணாபுரம் வாரசந்தைக்கு 6ஆயிரம்ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.ஆடு ஒன்று சராசரியாக எடைக்கு தகுந்தாற்போல் ரூபாய் 6ஆயிரம் முதல் 20,000 வரை விலை போனது. இன்று இச்சந்தையில் 4500 ஆடுகள் ரூ.ஆறு கோடிக்கு விற்பனைஆனது.

தைபூசம் முடிந்ததால் இந்தவாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்திருந்தது. மேலும் ஆடுகளின் விலையும் அதிகரித்திருந்தது.I

Tags

Next Story