வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் பலி

வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் பலி

பலியான ஆடுகள்

வலங்கைமான் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலங்கைமான் அருகே ஊத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மனைவி சுந்தரி ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரி திடீரென ஊருக்கு சென்ற நிலையில் அவரது ஆடுகள் வாழைத்தோப்பில் மேய்ந்ததாக கூறப்படுகிறது வீடு திரும்பிய சுந்தரி வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டு கொட்டகையில் பார்த்த பொழுது அங்கு ஆறு ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது சுந்தரி கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கால்நடை மருத்துவர் வருவதற்கு முன்பே இரண்டு ஆடுகளும் உயிரிழந்து விட்டன ஒரே நேரத்தில் 8 ஆடுகளை பறிகொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags

Next Story