பகவதி அம்மன் குடமுழுக்கு விழா

பகவதி அம்மன் குடமுழுக்கு விழா

குடமுழுக்கு விழா

திண்டுக்கல் மாவட்டம், குமரபட்டியில் பகவதி அம்மன் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள குமரபட்டியில் பகவதி அம்மன், வெற்றி விநாயகர், பழனி ஆண்டவர் கோயில்களில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது இதையொட்டி மங்கள இசை, திருமறை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தனி பூஜை,வாஸ்து சாந்தி, திக்பந்தனம், பிரவேச பலி, விருச்சகிரணம் அங்குரார்பணம், ரக்ஷா பந்தனம், முதற்கால யாகசால பூஜை, வேத பாராயணம், திருவியாகுதி, மூல மந்திரஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சனிக்கிழமை 4-ஆம் கால பூஜைகளுக்கு யாகசாலை பின் ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த காசி,ராமேஸ்வரம், அழகர்மலை, கரந்தமலை உள்ளிட்ட பல்வேறு ஸ்தலங்களில் புனித இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்ததக்குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்துசெல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story