நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு :மர்ம நபர்கள் கைவரிசை

நடந்து சென்ற பெண்ணிடம்  தங்க நகை பறிப்பு :மர்ம நபர்கள் கைவரிசை

நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு :மர்ம நபர்கள் கைவரிசை

சங்ககிரி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிப்பு மர்ம நபர்கள் கைவரிசை போலீசார் வலைவீச்சு.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சங்ககிரி போலீசார் விசாரணை. சங்ககிரியை அடுத்த கஸ்தூரிப்பட்டி, கவுண்டர் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜமுத்து மனைவி கமலம் (67). இவர் ரெயின்போ காலனி பகுதியில் தேநீர் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் தனது வீட்டிலிருந்து அக்கடைக்கு பூ முனிசாமி கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கமலம் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு கண்ணிமைக்கும் பறந்து சென்றுள்ளனர். மேலும் இது குறித்து கமலம் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.இச்சபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story