அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்,மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில்,இன்று பிறந்த குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெட்டகங்களை வழங்கினர்.

Tags

Next Story