திருவண்ணாமலை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்புத்திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்புத்திட்டம்

கோமாரி நோய் முகாம்


திருவண்ணாமலை மாவட்டம் கோமாரி நோய் தடுப்புத்திட்டம் திருவண்ணாமலை கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரிநோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரிநோய் தடுப்பூசிப்பணி இலவசமாக ஆண்டிற்கு 2 முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தற்போது (NADCP-FMD) கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி வது சுற்று 06-11-2023 முதல் 26-11-2023 வரை தடுப்பூசி பணி 4 இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இத்தடுப்பூசி போடப்படும் நாட்களில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரிநோய் தடுப்பூசிப்போட்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100% பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே விவசாயிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்திட தடுப்பூசிபோட்டு பயன்படுத்தி கொள்ளுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story