பாரதிபுரத்தில் புனித வெள்ளி சிறப்பு பிராத்தனை

பாரதிபுரம் பகுதியில் புனித வெள்ளியை முன்னிட்டு பாரதிபுரம் இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தார். இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலங்களிலும் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் ஏசுநாதர் சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி பாரதிபுரத்தில் அன்னசாகரம் செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில் நேற்று மாலை புனித வெள்ளியை முன்னிட்டு ஏசுவை சிலுவையில் அறையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தத்ருபமாக நடித்துக் காட்டினர். தொடர்ந்து பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை ஆரோக்கிய பிரதீப் முன்னிலை வகித்தார். இந்த பிரார்த்தனையில் பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story