ஜூன் 4ல் நல்ல ரிசல்ட் வரும் - எச். ராஜா நம்பிக்கை

50 ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த மோசமான ஆட்சிக்கு ஜூன் 4ஆம் தேதி நல்ல ரிசல்ட் வரும் என களஞ்சேரியில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களஞ்சேரி கிராமத்தில் 50 மேற்பட்ட மாணவர்களை கொண்டு வேத பாடசாலை நடத்தி வருபவர் சீதாராமன் சாஸ்திரி இவர் சமீபத்தில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமானால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரிக்க வேண்டும் கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளரை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறி ஆடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்

இந்நிலையில் அவர் களஞ்சேரி கிராமத்தில் நடை பயிற்சி மேற்கொண்டபோது இரண்டு மர்ம நபர்கள் சீதாராமன் சாஸ்திரியை தாக்கியதாக கூறப்படுகிறது இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து தகவலறிந்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா களஞ்சேரி கிராமத்துக்கு வருகை தந்து தாக்கப்பட்ட சீதாராம் சாஸ்திரியை நேரில் சந்தித்துஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.

பின்னர் எச்.ராஜா பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, வேதம் படித்தவர் மோடியின் கூட்டணி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதில் என்ன தவறு உள்ளது. அதற்காக அவரை கருவை காட்டிற்குள் குண்டர்கள் இழுத்துச் சென்று தாக்குதல் நடத்தி உள்ளனர். திராவிட கட்சிகள் அசுர கட்சிகள் என்று அவர் பதிவிட்டதில் என்ன தவறு உள்ளது. துணைக் கண்காணிப்பாளர் சொல்லுகிறார் இன்றைக்கு தானே புகார் கொடுத்துள்ளீர்கள் பார்க்கிறோம் சொல்கிறார். இந்த வழவழ கொல கொல இல்லாமல் காவல்துறை உடனடியாக இந்த வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி கைது செய்யவில்லை என்றால் வாக்குப்பதிவிற்கு பிறகு பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

குழந்தைகள் பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் குழந்தைகளின் பையில் பொட்டலங்கள் இருக்கிறதா என்று பெற்றோர்கள்,பெரியவர்கள் அச்சப்படும் நிலை இந்த திராவிட ஆட்சியில் தான் உள்ளது. இந்த அசுர கட்சியை மாற்றுவதில் என்ன தவறு உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதில் என்ன தவறு உள்ளது. நல்லவர்கள் வாக்களிக்கு செல்லாமல் கெட்ட அரசியலை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி துஸ்டர்கள் ஆட்சி, வன்முறையாளர்கள் ஆட்சி. இந்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க நல்ல ஆட்சி களத்திற்கு வரும். 50 ஆண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த மோசமான ஆட்சிக்கு ஜூன் 4-ஆம் தேதி நல்ல ரிசல்ட் வரும் என பேட்டியளித்தார். முன்னதாக குழந்தைகள் பயின்று வரும் வேத பாடசாலையை எச் ராஜா பார்வையிட்டார் பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகளும் சார்பு பணி நிர்வாகிகளும் உடன் இருந்தனர்

Tags

Next Story