கல்பாக்கம் அருகே மின்கசிவு காரணமாக பொருட்கள் எரிந்து நாசம்

கல்பாக்கம் அருகே மின்கசிவு காரணமாக  பொருட்கள்  எரிந்து நாசம்
மின்கசிவு காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசம்.
கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் முரளி என்பவரது வீட்டில் மின்கசிவு காரணமாக 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் பகுதியில் வசிக்கும் முரளி- முத்துலட்சுமி தம்பதியினர். இருவரும் வெளியே சென்றிருந்தபோது திடீரென வீட்டுக்குள் இருந்து வெடிக்கும் சத்தத்துடன் கரும்புகை வருவதாக அருகில் இருந்தவர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த முரளி வீட்டை திறந்து பார்த்தபோது குளிர்சாதன பெட்டி கொழுந்து விட்டு மல மல என எரிந்து கொண்டிருந்தது உடனே மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே செல்வதற்குள் ஏசி, டிவி, வாட்டர் ஹீட்டர், மின்விசிறி, தையல் இயந்திரம், பீரோவில் இருந்த துணி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீ பரவி சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மின் கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story