சேலத்தில் செல்போன் கடையில் பொருட்கள் திருட்டு

சேலத்தில் செல்போன் கடையில் பொருட்கள் திருட்டு

பைல் படம் 

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆரீப் (28). இவர் பள்ளப்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். ஆரீப் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடைக்குள் சென்று பார்த்த போது மடிக்கணினி, 2 ஸ்பீக்கர்கள், 2 பழைய செல்போன்கள், 5 சார்ஜர்கள் ஆகிய பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஆரீப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story