வேப்பந்தட்டை அருகே தீ விபத்தில் ரூ.6லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

வேப்பந்தட்டை அருகே தீ விபத்தில் ரூ.6லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

தீ விபத்து ஏற்பட்ட வீடு

வேப்பந்தட்டை அருகே தீ விபத்தில் ரூ.6லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கூலி தொழிலாளிகளின் வீடுகள் எரிந்து சாம்பல் ஆனதில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ..... பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள திருவாலந்துறை கிராமத்தில் வசிப்பவர்கள் செல்லமுத்து மற்றும் செல்வராஜ்.

இவர்கள் இருவரும் அருகருகே உள்ள கூரை வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களது குடும்பத்தினர் அன்றாடம் விவசாயம் உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென இவர்களது வீட்டில் இருந்து கரும்புயுடன் வீடுகள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. முதலில் செல்லமுத்து வீட்டில் தீப்பிடித்த நிலையில் அது அவரது வீட்டின் அருகே வசித்து வரும் செல்வராஜின் வீட்டிற்கும் பரவியதில் இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து தகவல் அறிந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீச்சி தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் செல்லமுத்து மற்றும் செல்வராஜ் வீடுகளிலிருந்த துணி உடைமைகள், சமையல் பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் எரிந்து தீக்கிரையானது. இதில் ஒவ்வொருவர் வீடுகளிலும் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது .இந்த தீ விபத்து குறித்து வி.களத்துார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story