தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு ‛'குண்டாஸ்'

தொடர் குற்றங்களில் ஈடுபட்ட இருவருக்கு ‛குண்டாஸ்

கைது செய்யப்பட்டவர் 

ஒரகடத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், வந்தவாசி தாலுகா, சோரப்புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல், 20. குன்றத்துார், நந்தம்பாக்கம் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் முகமது அஸ்வாக, 21. இவர்கள் இருவர் மீதும், ஒரகடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் வழிப்பறி வழக்கு ஒன்றில், ஒரகடம் போலீசார் இருவரையும் கைது செய்து, வேலுார் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் பரிந்துரையின் படி, கலெக்டர் கலைச்செல்வி இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, ஒரகடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், அதற்கான ஆணையை வேலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கி, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

Tags

Next Story