திருடியவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

திருடியவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

பைல் படம் 

ஆறுமுகநேரியில் வீடு புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடியவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் செல்வேந்திரன் (57) என்பவரது வீட்டிற்குள் புகுந்து கடந்த 04.05.2024 அன்று வீட்டில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம் மற்றும் ரூபாய் 45,000/- மதிப்புள்ள 1½ சவரன் தங்கநகையை திருடிய வழக்கில் ஏரல் சேதுக்குவாய்தான் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முகேஷ் (எ) சதீஷ் (24) என்பவரை ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

முகேஷ் (எ) சதீஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story