வழிப்பறி வழக்கில் கைதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

வழிப்பறி வழக்கில் கைதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

பைல் படம்

சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 37). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சேலம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த அவர் தலைமறைவானார். பின்னர் கடந்த மாதம் ஒரு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அடிக்கடி குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் பிருந்தா பரிந்துரை செய்தார். இதையடுத்து சீனிவாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

Tags

Next Story