அரசு பஸ் , கார் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் படுகாயம்

அரசு பஸ் , கார் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் படுகாயம்

பூதப்பாண்டியில் அரசு பஸ் , கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.


பூதப்பாண்டியில் அரசு பஸ் , கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

குமரி மாவட்டம் கல்லுக் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் பால் சுதாகர் (50) இவர் சொந்த வேலை காரணமாக தடிக்காரன் கோணத்திற்க்கு ஒருவரை பார்க்க தன்னுடைய சொகுசு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தெரிசனங் கோப்பு அருகே வரும் போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக காரில் நேருக்கு நேர்மோதியது.

இதில் பலத்த காயமடைந்த பால் சுதாகர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்த முருகன் (44) என்பவர் அரசு பஸ்சை ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story