அரசு பேருந்து நடத்துனர் தற்கொலை

அரசு பேருந்து நடத்துனர் தற்கொலை

காவல்நிலையம்


காரைக்குடி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி மகன் இளங்கோ (வயது 36). இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வரும் நிலையில் நண்பர் ஒருவருக்கு ஜாமின் கையெப்பமிட்டு லோன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் லோன் வாங்கிய நண்பர் திடீரென உயிரிழந்த நிலையில், அந்த லோனை, தான் கட்ட வேண்டும் என்கிற அச்சத்தில் பூச்சி கொள்ளி மருந்தை குடித்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி காந்திமதி அளித்த புகாரின் அடிப்படையில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story