உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
![உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு](https://king24x7.com/h-upload/2024/02/15/393930--.webp)
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் பகுதியில் இருந்து நேற்று காலை 8:30 மணியளவில் அரசு டவுன் பஸ் (தடம் எண்-16) உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஆத்துார் அருகே பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மர்ம நபர்கள் கற்களை வீசி அரசு பஸ்சின் பின்பக்கம் கண்ணாடியை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story