உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

உளுந்துார்பேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எம். குன்னத்துார் பகுதியில் இருந்து நேற்று காலை 8:30 மணியளவில் அரசு டவுன் பஸ் (தடம் எண்-16) உளுந்துார்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஆத்துார் அருகே பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மர்ம நபர்கள் கற்களை வீசி அரசு பஸ்சின் பின்பக்கம் கண்ணாடியை சேதப்படுத்தினர். புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story