இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இயக்கப்படும் அரசு பேருந்து

அரவக்குறிச்சியில் பயணிகளின் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இயக்கப்படும் அரசு பேருந்து. நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை. தேனியிலிருந்து கரூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் பயணிகள் இருக்கைகள் சேதமடைந்து கழண்டு விழுந்ததால் பயணிகள் அச்சம். கரூர் மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல்வேறு மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனியில் இருந்து கரூருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை பயணம் செய்யும் விதமாக அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து அரவக்குறிச்சி வழியாக தேனி செல்லும் பேருந்து பயணிகள் இருக்கையில் அமருவதற்கு முன்பாகவே சேதம் அடைந்த இருக்கை தானாக கழண்டு விழுகிறது. அதேபோன்று மழைக்காலங்களில் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் பேருந்துக்குள் தண்ணீர் ஒழுகி வருகிறது. இதனால், பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் விரைந்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story