அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் போராட்டம்

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் போராட்டம்

போராட்டம்

ஆலங்குளத்தில் அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் போராட்டம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் உள்ள காமராஜர் அரசு கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் நல சங்கம் சார்பில் கல்லூரி வாயில் முன்பு முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்க்கு மண்டல தலைவர் சித்திரை கனி தலைமை வகித்தார். கிளை தலைவர் கதிரேசன், சேய் ஹரிஹரசுதன் பொரு மாரிச்செல்வி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு 1146 கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story