அரசு மருத்துவமனை கட்டிட பூமி பூஜை

அரசு மருத்துவமனை கட்டிட பூமி பூஜை

சுவாமிமலை சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டிட பூமி பூஜை நடைபெற்றது.


சுவாமிமலை சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டிட பூமி பூஜை நடைபெற்றது.
சுவாமிமலை அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் ஊராட்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஜி. கே. வாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுஜிதா தலைமை வகித்து குத்து விளக்கு ஏற்றி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, கும்பகோணம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் அரவிந்தன், ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். விழாவில் கட்டிட ஒப்பந்தக்காரர் கார்த்திக், மற்றும் கிளை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story