பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்கள் எழுதி தர வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்கள் எழுதி தர வேண்டும்

குறைத்தீர் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைப்பெற்ற குறைத்தீர் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அரசு அலுவலர்கள் எழுதி தர ஏற்பாடு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது மனு அளிக்க வரும் மனுதார்களின் கோரிக்கை மனுவினை அரசு அலுவலகத்தில் பணிப்புரியும் பணியாளர்களை கொண்டு எழுத மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப.,அவர்கள் ஏற்பாடு செய்தார். பொது மக்கள் சொல்லும் கோரிக்கை மனுக்களை எழுதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story