மதுக்கடைகளை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

மதுக்கடைகளை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

மதுக்கடைகள் மூடல்

திருச்சியில் ஜனவரி 16,25,26 ஆகிய நாட்களில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளுவா் தினம் (ஜன.16), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.25), குடியரசு தினம் ( ஜன.26) ஆகிய மூன்று நாள்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மது அருந்தும் மதுக்கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று விற்பனை நடைபெறும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தாலோ, மது விற்பனை செய்தாலோ தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாா் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

Tags

Next Story